Category: கவிதைகள்


தொலைந்து விட்ட கனவிலும் !! தொலையாத என் நினைவுகள் என்றும் உன்னை நினைவுப்படுத்தும் வலிகளோடு….

உன் பார்வை உணர்த்திய அன்பினை.. உன் வார்த்தைகள் உணர்த்த மறுத்தது ஏன் ????!!!!

கண்களில் தொடங்கி, இதயத்தில் உருவாகும் அன்பு முடிவது மட்டும் ஏனோ கண்ணீரில்…..

கனவுகள் நிஜமாகும் தருணத்தில் கலைக்கப்படுவது கொடுமையிலும் கொடுமையான தருணம்..

உன்னை விட்டு விலக நினைத்தாலும் காலம் என்றும் உன்னை சுற்றும் படியே செய்கிறது நினைவுகளாலும்

நிஜங்கள் தரும் சந்தோஷத்தை விட .. நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம் … நிஜங்கள் நிலைப்பதில்லை.. நினைவுகள் அழிவதில்லை

விருப்பம் இருந்தும் உன்னிடம் பேசாமல் இருக்கிறேன் ..வெறுப்பதற்காக அல்ல … தவறுகளை நீ உணர வேண்டும் என்பதால் …

பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான் அன்பு அதிகமாக இருக்கும்…!

உன்னால் பிறர் ஏற்படுத்திய காயங்களை விட….. இப்போது நீ ஏற்படுத்திய காயங்கள் இதயத்தில் வலிக்கிறது..!!

தென்றல் சிலிர்க்க வைக்க … தொலைவில் நட்சத்திரங்கள் ஜொலிக்க… தேவதையாய் வந்து என் மனதை… தொலைக்க வைத்த நிலா!!!!!!!! ..